Friday 31 January 2014

US doctor walks 10 km in snow to perform brain surgery

Houston:  Where there is a will, there is a way; an old adage was proved by a US surgeon who walked nearly 10 kilometres through snow to perform a life-saving brain surgery.

Dr Zenko Hrynkiw, the only brain surgeon at Trinity Medical Centre in Birmingham, was at a hospital when he was called at a different hospital for an unexpected, life-saving brain surgery.

According to reports, Hrynkiw tried to make the drive, but a sudden snowstorm unfortunately produced a traffic nightmare. He was only able to drive for a few blocks before it became clear that he would not be able to make it behind the wheel.

So, he walked about 10 kilometres to the hospital and then performed the surgery on a patient suffering from a traumatic brain injury.

According to a nurse Steve Davis, Hyrnkiw called up and said: "I'm walking".

On reaching, he spoke to the family of the patient and performed the surgery, Davis said.

"Without the surgery, the patient would have most likely died," hospital sources said.

Despite a light dusting of snow in the south on Tuesday, many cities were dealing with bad road conditions and terrible traffic, with some abandoning their cars on the roads and taking refuge in nearby stores.

Tuesday 28 January 2014

Cong names Selja, Sanjay Singh for Rajya Sabha

Union minister Kumari Selja was on Tuesday named Congress nominee for Rajya Sabha elections, putting an end to speculation that former Delhi chief minister Sheila Dikshit could be brought to the Upper House from Haryana.

Congress also nominated Sultanpur MP Sanjay Singh from Assam besides re-nominating Assam PCC chief Bhubaneswar Kalita from the state.

Dikshit was being talked about as a probable candidate from Haryana where several local leaders were also aspirants. Five names were suggested from Haryana.

The former Delhi chief minister was also being talked about as the probable nominee from Himachal Pradesh but there, too the high command brought Viplove Thakur as a candidate.

Sanjay Singh hails from Amethi and holds considerable influence there. Amethi is the constituency of Congress Vice President Rahul Gandhi while Sonia Gandhi contests from neighbouring Rae Bareli. There was earlier speculation that Singh could join the BJP.

Congress general secretaries Digvijaya Singh and Madhusudan Mistri were among five Congress nominees for Rajya Sabha elections announced yesterday.

From Andhra Pradesh, Congress re-nominated all the three sitting Rajya Sabha MPs, KVP Ramachandra Rao, MA Khan and T Subbarami Reddy. Khan hails from Hyderabad.

The party had on Sunday announced the names of seven candidates, including Motilal Vora, Murli Deora and Ranjib Biswal from Chhattisgarh, Maharashtra and Odisha respectively. Hussain Dalwai was also re-nominated from Maharashtra.

Other nominees were Haji Abdul Salam from Manipur, and Wansuk Syiem from Meghalaya.

Tuesday is the last date for filing nominations for the February 7 polls and the scrutiny will be held tomorrow. The last date for withdrawal of candidature is January 31.

Saturday 25 January 2014

Maoists abduct five officials in Jharkhand

Suspected Maoists abducted five people in Jharkhand's Giridih district, police said on Saturday.

Three of the victims are members of the Prime Minister Rural Development Fellowship programme.

The abduction took place in Navkania village, around 300 km from Ranchi.

"We have launched an operation to free the abducted people," Kranti Kumar, the superintendent of police of Giridih, told IANS over telephone.

Wednesday 22 January 2014

PM meets President Pranab Mukherjee, Arvind Kejriwal's protest features in talks

New Delhi:  As Delhi remains grid-locked by a stand-off between Chief Minister Arvind Kejriwal and the Delhi Police, the Prime Minister met President Pranab Mukherjee this evening and briefed him on Mr Kejriwal's sit-in protest, now in its second day.

Sources say the meeting was pre-scheduled to discuss the arrangements for Republic Day.   Mr Kejriwal's sit-in protest, now in its second day, is being held in the heart of the capital in a high-security zone that houses parliament, various ministries and the President's home, Rashtrapati Bhawan.

There is no question of any extreme steps like dismissing the government, sources told NDTV. "He is a Constitutional authority. We can only watch," they said.

The Republic Day parade involves missiles and tanks moving down the main avenue in a proud and patriotic display of India's military might.

The arrangements for those celebrations necessitate a security lock-down of the area that Mr Kejriwal has now turned into his camp. He spent the night in the cold on the road near his Wagon-R and woke up to chilly winds and rain, vowing, "This is not a 10-day protest. It could be infinite if we don't get what we have asked for."

Mr Kejriwal's demands involve what he describes as urgent police reforms. He wants the control of the Delhi Police to be transferred to his government from the Union Home Ministry, a point made by earlier chief ministers of Delhi as well. Mr Kejriwal, 45, also wants five police officers to be suspended immediately for failing to make a series of arrests ordered by his ministers. The police officers concerned have said they did not have warrants.

The Congress anchors the ruling coalition at the Centre. It is also propping up Mr Kejriwal's minority government in Delhi. Sources in the party say the Congress is determined not to withdraw that support because it could confer martyr status on Mr Kejriwal ahead of the national election. Instead, sources say the Congress wants him to stand exposed as a man more suited to leading demonstrations rather than a government.

Monday 20 January 2014

Sanjay Dutt's parole extended by a month

Bollywood actor Sanjay Dutt, in Mumbai on a month's leave from Pune's Yerwada Jail, has received an extension of his parole for a month. The actor, who was scheduled to return to prison on January 21, had applied for extension citing wife Maanyata's ill-health.

Manyata is reported to be suffering from multiple ailments of the heart and liver and was admitted to Global Hospital in Parel, south-central Mumbai, over a week ago for treatment.

Mr Dutt was previously granted an extension on his last leave from jail in October last year. He was granted two weeks leave on medical grounds on October 1 and an extension of another two weeks on October 14.

Mr Dutt had surrendered in a TADA court in Mumbai in May last year after the Supreme Court delivered a final verdict on the Bollywood actor's part in the bomb blasts that ripped Mumbai apart in 1993. Mr Dutt, who was sentenced to six years in jail in 2007, had his sentence reduced by a year. He had already served 18 months of his sentence and was sent to prison to serve the remaining 42 months left of the five-year jail term he was handed by the Supreme Court.

Sunday 19 January 2014

பொதுவுடமை தந்தை ப.ஜீவானந்தம் நம்மை விட்டு பிரிந்து 50 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன:இன்று நினைவு நாள்

பொதுவுடமை கட்சி என்றும் அழைக்கப்பட்ட சோசலிச இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ப. ஜீவானந்தம் நாகர்கோவில அடுத்த அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் வாழ்ந்த  பட்டத்தார் - உமையம்மாள் தம்பதியரின் மகனாக 21-08-1907-ம் ஆண்டு பிறந்தார்.

அந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கிய-சொரிமுத்து என்றும் அய்யனார் என்றும் அழைக்கப்பட்ட குல தெய்வத்தின் நினைவாக தங்களது அருமை மகனுக்கு பெற்றோர் சொரிமுத்து என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மகாத்மா காந்தியின் கொள்கைகள் இளம் வயதில் அவரை வெகுவாக கவர்ந்தது. சீர்திருத்த கொள்கைகளுடன் அந்நாட்களில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.

நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும்போதே காந்தியையும், கதரையும் பற்றியமுதல் கவிதையையும் எழுதினார்.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றியதுடன் அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்காக போது அழைப்பு வந்த போது காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அன்று முதல் தனது இற்தி மூச்சு இருந்த வரை அவர் கதர் ஆடைகளையே விரும்பி அணிந்தார்.

வன்முறையில் நம்பிக்கையற்ற கொள்கை உடையவராக இருந்தபோதிலும் விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரன் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த கொடுமையை கண்டு கொதித்துப் போய் சீறி எழுந்தார். வெள்ளையர் ஆட்சிக்கெதிராக அவர் ஊர்,ஊராக சென்று கண்டன் கூட்டங்களில் முழங்க தொடங்கினார். எரிமலையின் சீற்றத்துக்கு நிகரான அவரது அனல் கக்கும் கண்டன உரைகள்  இளைஞர்களைக் பெரிதும் கவர்ந்தது.

பின்னர், பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலினைத் தமிழில் மொழிபெயர்த்தார், ஜீவா. பகுத்தறிவு தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். இத்ற்காக ஜீவாவைக் கைதுசெய்த பிரிட்டிஷ் போலீசார், அவரது கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க பொதுவுடமை கொள்கைளால் ஈர்க்கப்பட்டார்.

ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகனின் முழுநேர அரசியல் போக்கினால் அதிருப்தியடைந்த அவர்கள் ஜீவாவின் தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

தன்மானம் மிக்கவரான ஜீவாவால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க மறுத்து-குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

வ.வே.சு. அய்யர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி புரிந்தார். எனினும்,அய்யரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்காத ஜீவா, அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.

வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளிலும் இவரது பங்களிப்பு இன்றியமையாதது. தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டு, சிறந்த காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்த ஜீவா, கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவரான ஜீவா, சுமார் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தார்.


அப்பழுக்கற்ற நேர்மை, தன்னலம் கருதாத தொண்டுள்ளம், எதற்கும் அஞ்சாத வைர நெஞ்சம், கொண்ட கொள்கையில் இருந்து தடம் புரளாத நெஞ்சுறுதி படைத்த ஜீவாவின் எளிய வாழ்க்கையை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்துக் கொள்ள அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓரிரு சம்பவங்களை இன்று பகிர்ந்து கொள்வது மிக பொருத்தமாக இருக்கும்.

சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் ஜீவா காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது, கட்சிக்காக அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.

ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

தற்கால அரசியல்வாதிகள் போலன்றி, அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் ஒருவர் மீது மற்றவர் அளவுகடந்த அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர்.

சென்னை மாகாண முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பதவி வகித்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.

பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.

ப.ஜீவானந்தத்தை பற்றி உலகத் தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் அந்நாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எழுதும் போது "பொதுவுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலகட்டத்தில் குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலகினார். 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார்.

அவ்வேளையில், மேடை நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. குறிப்பாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வரப்பட்டது.

புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம்என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது சட்டமன்றத்தில் ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது .
’கண்ணாடிக்கு முன்போய் நின்ற மூக்கரையன் கண்ணாடியில் தன் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்ட போது தன் உருவம் எவ்வளவு கோரமானது என்று சிந்தித்துப் பார்க்காது, கண்ணாடியை உடைத்தெறிந்தது போல, புராணங்களில் உள்ள ஆபாசத்தை எடுத்துச் சொன்னால், இதிகாசங்களில் உள்ள ஊழல்களை எடுத்துக் காட்டினால் காட்டுபவர்களின் மேல் சீற்றப்படுகிறார்கள் சிலர். (சிரிப்பு)

காரணம், அவர்கள் மனம் புண்படுகிறதாம். வாஸ்தவம். புண்படத்தானே செய்யும். ஆனால், எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா? இவ்வளவு ஆபாசமானவைகள் எல்லாம் எங்கள் மதத்தில் இருக்கின்றனவே என்று எண்ணும்போது எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா என்று கேட்கிறேன்.’ என்று நகச்சுவை ததும்பும் பகுத்தறிவு பிரசாரத்தின் மூலமாகவே அந்த மசோதாவை ஏன் எதிர்க்கிறோம்?என்பதற்கான கொள்க விளக்கத்தை அவர் பதிவு செய்தார்.

எளிய அர்சியல் வாழ்க்கைக்கு புதிய அகராதியாக வாழ்ந்து காட்டிய ப. ஜீவானந்தம் 18-01-1963 அன்று காலமானார்.

ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தத்தின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் இங்கு கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது.

தன்னிகரற்ற அந்த பொதுவுடமை தலைவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை அவரது 51-வது நினைவு தினமான இன்று, வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மாலை மலர்.டாட் காம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

Thursday 16 January 2014

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி: பிரசாந்த் பூஷன் அறிவிப்பு

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

குடியரசு தினமான வரும் 26-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்கும் நோக்கத்தில் ‘நானும் ஆம் ஆத்மி’ என்ற பெயரில் மாபெரும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த முகாம் தொடங்கிய நான்கே நாட்களில் 12 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் வரை, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சில மாநிலங்களில் உள்ள சுமார் 200 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்பட்டு வந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்து போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அரசியலையே வெறுத்து வந்த நடுநிலையாளர்கள் பலர் தங்கள் கட்சியில் தற்போது இணைவதை கண்டு ஆம் ஆத்மி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபல சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும், கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பிரசாந்த் பூஷன், ‘ நாட்டில் தற்போது புதிய அரசியல் புரட்சி உருவாகியுள்ளது.

மாற்று அரசியலை உருவாக்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட மக்கள் அணிஅனியாக எங்கள் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

2014- பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவோம். எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர் மற்றும் தொகுதிகள் கொண்ட முதல் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Friday 10 January 2014

குடியரசு தினத்துக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம்

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசு தினமான வரும் 26-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்கும் நோக்கத்தில் ‘நானும் ஆம் ஆத்மி’ என்ற பெயரில் மாபெரும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் சுறுசுறுப்பாக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணீயில் தீவிரம் காட்டிவரும் கெஜ்ரிவால் இம்முகாமின் போது நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

‘நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. புதிய உறுப்பினர்களாக இணைய விரும்புபவர்கள் இந்த அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆர்வத்துடன் தகவல்களை அறிந்து செல்கின்றனர்.

அவர்களின் வசதிக்காகவும் உறுப்பினர் சேர்க்கையை எளிமைப்படுத்தவும் 07798220033 என்ற இலவச ஹெல்ப்லைன் எண் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உறுப்பினராக சேர்வது தொடர்பான பொதுமக்களின் ஐயங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். இதே எண்ணின் மூலம் சேர்ந்தவரின் உறுப்பினர் எண்ணும் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு முன்புவரை புதிய உறுப்பினர் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, அந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும் குடியரசு தினத்துக்குள் (ஜனவரி-26) நாடு முழுவதும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’ என்று அவர் கூறினார்.